அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
புரட்டாசியும் பங்குனியும் எமனின் கோரைப்பற்கள் என்று கருதப்படுகின்றன. ஜீவராசிகள் எமனின் பற்களில் சிக்கித் துன்பப்படுவதைத் தவிர்க்க நவராத்திரி ஒன்பது நாளும் வழிபட வேண்டும்.