tag:blogger.com,1999:blog-40663752298262253242023-11-16T03:11:37.376-08:00ஆன்மீகம்testhttp://www.blogger.com/profile/14757701806482180362noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4066375229826225324.post-8710537360524003002013-10-25T03:33:00.000-07:002013-10-25T03:33:58.360-07:00திருநீற்றின் மகிமையும் சிறப்பும் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLNifxECKRF1vsSJTprET04KirzkbdaAuyMtQ1fbXP4_BqHrkgrRLYFYK_Bo1_6cQ35VERJLeXfmbPKvz0ejiQPuRK-g7lop0OMeXVTBry_wp84d9h-t0dS89zDzDOyo75GdefqUVjBvI/s1600/thiruneeru.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLNifxECKRF1vsSJTprET04KirzkbdaAuyMtQ1fbXP4_BqHrkgrRLYFYK_Bo1_6cQ35VERJLeXfmbPKvz0ejiQPuRK-g7lop0OMeXVTBry_wp84d9h-t0dS89zDzDOyo75GdefqUVjBvI/s400/thiruneeru.JPG" width="400" /></a></div>
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.<br />
<a name='more'></a><br />இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.<br />எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்து மதத்தவர்களிடம் காணப்படுகின்றது.<br />
<br />
<br />இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxA2SJv3sqqz6xiYR7oCVd1skhf2qOFUVp2CO_lEi2HzyqGKY92tl4CYQQCWSd7l_mOcaorrUS4pR9WLkA1DkTQhCH8yXckCxlOGkO4I-eIR5_2QlAO_Fy8F5TcEhMDCbzmiDAPh_Uj6w/s1600/thiruneeru.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="328" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxA2SJv3sqqz6xiYR7oCVd1skhf2qOFUVp2CO_lEi2HzyqGKY92tl4CYQQCWSd7l_mOcaorrUS4pR9WLkA1DkTQhCH8yXckCxlOGkO4I-eIR5_2QlAO_Fy8F5TcEhMDCbzmiDAPh_Uj6w/s400/thiruneeru.PNG" width="400" /></a></div>
<br />தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால் இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். பறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா. அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.<br />
பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.<br />
<br />
<br />இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன.<br />
<br />
<br />சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.<br />
<br />
<br />சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!<br />
<br />
<br />நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.<br />
<br />
<br />இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.<br />
<br />
<br />விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்..<br />
<br />
<br />1. புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.<br />
<br />
<br />2. தொண்டைக்குழி (விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.<br />
<br />
<br />3. நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.</div>
testhttp://www.blogger.com/profile/14757701806482180362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4066375229826225324.post-64982125592140252082013-10-25T03:04:00.000-07:002013-10-25T03:04:22.133-07:00குருவடி சரணம்! குருவே சரணம்! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzdzPQj7NEVDXBtEDc9_vzIduril5tt4CbAiFISKlm-IxFZkFoXvM6SCA6B8WF_783gv-PqRONEF5x-Y3vITy33tBNX5gLWhC7kC25N6IcZvU6X4ZIMH6ZH-ujT-Y5_thi8z1EO811rC8/s1600/gg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzdzPQj7NEVDXBtEDc9_vzIduril5tt4CbAiFISKlm-IxFZkFoXvM6SCA6B8WF_783gv-PqRONEF5x-Y3vITy33tBNX5gLWhC7kC25N6IcZvU6X4ZIMH6ZH-ujT-Y5_thi8z1EO811rC8/s400/gg.jpg" width="292" /></a></div>
என்றோ செய்த புண்ணியப் பலனாய்<br />சென்றிடும் போதெலாம் தரிசனம் தந்தாய்<br />அன்பே ஒன்றே அணிகலனாக்கி<br />அகமும் புறமும் நிறைத்திட வந்தாய்<br />
<a name='more'></a><br />கனிவுடன் பணிவாய் பணிவினில் வெல்வாய்<br />காணும் யாவிலும் கடவுளைக் காண்பாய்<br />இனிமை ஒன்றே நின் சொலில் வந்திட<br />அடியவர் யாவரும் மகிழ்ந்திடச் செய்வாய்<br />
<br />பழகிட எளிமை பார்த்திட இனிமை<br />அழகிய முகத்தின் அருளொளி இனிமை<br />திகழும் புன்னகை சிந்திட இனிமை<br />புகலும் மொழிகள் கேட்டிட இனிமை<br />
<br />இறைவன் இருப்பது நின்னால் புரிந்தேன்<br />நம்பிடும் சொல்லில் வேதம் உணர்ந்தேன்<br />கும்பிடும் அடியவர் குணங்கள் அறிந்தேன்<br />கோபம் இல்லா வாழ்வினை விழைந்தேன்<br />
<br />இறைவழி சென்றிட இன்னல்கள் இல்லை<br />தன்வழி சென்றிடும் குணமும் அவனே<br />தன்வழி இறைவழி சேர்ந்திடும் போது<br />தன்னலமில்லா இன்பம் வருமே<br />
<br />என்வழி எனநான் எண்ணிடும் செய்கை<br />இறைவழி விட்டு விலகிடும் பாதை<br />என்செயல் செய்திட விளைந்திடும் வினைவுகள்<br />என்விதி என்பதை எனக்கே தெளிந்தாய்<br />
<br />தாயை வேண்டிட தயவவள் புரிவாள்<br />வேண்டும் யாவையும் விரைந்தே அருள்வாள்<br />கொடுப்பது ஒன்றே அவளின் குணமாம்<br />கோபம் கொள்வது இறையிலை என்றாய்<br />
<br />காலையில் தினமும் ஒருசிலநொடிகள்<br />தாயை வேண்டி தியானம் செய்தால்<br />நாளும் உடனே அன்புடன் காத்திட<br />நற்செயல் செய்திட தாயவள் வருவாள்<br />
<br />பலநூல் படித்துக் காலத்தைக் கழித்து<br />படித்ததன் பொருளை உணர்ந்திட மறுத்து<br />அனைத்தும் அறிந்ததாய் ஆணவம் பிடித்து<br />இருக்கும் நாட்களைச் செலவிடல் முறையோ<br />
<br />படித்தது போதும் பயிற்சியில் நுழைவாய்<br />நாளும் சிலநொடி தியானம் புரிவாய்<br />கனவினில் நிகழ்வது யாவும் பொய்யே<br />நனவிலும் அதுவே என்பதை உணர்வாய்<br />
<br />எதிரினில் இருப்பவர் யாரென உணர்ந்திட<br />ஐம்புலன் ஆளுமை அவசியம் தேவை<br />புலன்வழி அறிந்திடும் யாவும் பொய்யே<br />மெய்வழி எதுவென மனதினுள் தேடு<br />
<br />தன்னை அறிந்திட கனவுகள் புரியும்<br />நனவினில் நிகழ்வதும் கனவெனப் புரியும்<br />நின்னைத் தவிர்த்து நித்திலம் இல்லை<br />காணும் அனைத்திலும் தாயே கடவுள்<br />
<br />அனைத்தும் கடவுள் அகிலமும் கடவுள்<br />அன்பே கடவுள் ஆழ்மனம் கடவுள்<br />எல்லாம் கடந்தபின் ஏதெவர் கடவுள்<br />எல்லையில்லா நிறைவே கடவுள்<br />
<br />இறைவழி ஒன்றி நின்செயல் நடத்து<br />மறைவழி யாவும் மனதினுள் விளங்கும்<br />குறைவிலா இன்பம் உள்ளினுள் பெருகும்<br />நிறைவாய் வாழ்ந்திடும் நிம்மதி விளங்கும்<br />
<br />தெளிவிலா எதுவும் ஆன்மீகம் இல்லை<br />துணிவுடன் அதனைத் தள்ளிடல் நன்றே<br />இதுவே தெளிவென உள்மனம் சொல்லும்<br />அதுவே குருவருள் வாய்த்திடும் நன்நாள்<br />
<br />கனிவுடன் வருவான் கைகளைப் பிடிப்பான்<br />அன்பனே வாவென அழைத்துச் செல்வான்<br />இன்பம் நிறைத்திடும் வழியினைக் காட்டி<br />நண்பனாய் நின்னை நடத்திச் செல்வான்<br />
<br />பெருங்கடல் போலே நீசொன்ன வேதம்<br />சிறுதுளி அதனில் செப்பினேன் இங்கே<br />புரிதலில் மொழிதலில் தவறுகள் இருப்பின்<br />நீயே அறிவாய் குறைகள் களைவாய்<br />
<br />குருவருள் இன்றி திருவருள் இல்லை<br />குருவே ஒருவரின் வாழ்வின் எல்லை<br />அருளைப் பொழிந்திடும் அவன் தாள் சரணம்<br />குருவடி சரணம்! குருவே சரணம்!</div>
testhttp://www.blogger.com/profile/14757701806482180362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4066375229826225324.post-70824658361314100472013-10-25T02:59:00.000-07:002013-10-25T02:59:06.844-07:00நவராத்திரியின் சிறப்பியல்புகள் !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZ6Q3i7pNda7t3AuNlnaPQCFrbGQfath7E2Byh2KIzsGNGlV7aqIemPvCCcaNiW_-Jp8cY03W0_F-SGEqXG_Co2ANZSO70ADIkb2Yd5UnDc9FD89O2v_FQOY4udWNU0ivVhb2HjFy4PeM/s1600/mata-364.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZ6Q3i7pNda7t3AuNlnaPQCFrbGQfath7E2Byh2KIzsGNGlV7aqIemPvCCcaNiW_-Jp8cY03W0_F-SGEqXG_Co2ANZSO70ADIkb2Yd5UnDc9FD89O2v_FQOY4udWNU0ivVhb2HjFy4PeM/s400/mata-364.jpg" width="400" /></a></div>
புரட்டாசியும் பங்குனியும் எமனின் கோரைப்பற்கள் என்று கருதப்படுகின்றன. ஜீவராசிகள் எமனின் பற்களில் சிக்கித் துன்பப்படுவதைத் தவிர்க்க நவராத்திரி ஒன்பது நாளும் வழிபட வேண்டும்.<a name='more'></a><br />
<br />
முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லஷ்மியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபட வேண்டும்.<br />
<br />ஒன்பது மலர்கள், ஒன்பது வகை அலங்காரங்கள், ஒன்பது வகை நிவேதனம் என்று வழிபாடு அமைய வேண்டும். இறைவனுக்கு அழகு செய்தால் வாழ்க்கையும் அழகாக சிறப்புடன் அமையும் என்ற தத்துவம்தான் இந்த வழிபாட்டுக்குப் பின்னால் இருக்கிறது.<br />
<br />
<br />ஒன்பது நாட்களின் வழிபாடு<br />
<br />
<br />முதல் நாள் 2 வயது குழந்தையை அலங்கரித்து அம்மனை குமாரிகாவாக வணங்கினால் பணக்கஷ்டம் தீரும்.<br />
<br />
<br />இரண்டாம்நாள் மூன்று வயது குழந்தையை அலங்கரித்து திரிமூர்த்தியாக வணங்கினால் தன, தானியங்கள் பெருகும்.<br />
<br />
<br />மூன்றாம் நாள் நான்கு வயது குழந்தையை அலங்கரித்து கல்யாணியாக வழிபட்டால் எதிரிகள் விலக்கம் ஏற்படும்.<br />
<br />
<br />நான்காம் நாள் ஐந்து வயது குழந்தையை அலங்கரித்து ரோகிணியாக வழிபட்டால் கல்வி வளர்ச்சி மிகும்.<br />
<br />
<br />ஐந்தாம் நாள் ஆறு வயது சிறுமியை அலங்கரித்து காளிகாவாக வணங்கினால் துன்பம் நீங்கும்.<br />
<br />
<br />ஆறாம் நாள் ஏழு வயது சிறுமியை அலங்கரித்து சண்டிகா தேவியாக வணங்கினால் செல்வ வளர்ச்சி மிகும்.<br />
<br />
<br />ஏழாம் நாள் எட்டு வயது சிறுமியை அலங்கரித்து சாம்பவி வடிவில் வழிபட்டால் தம்பதிகளுக்குள் அன்யோன்யம் பெருகும்.<br />
<br />
<br />எட்டாம் நாள் ஒன்பது வயது சிறுமியை அலங்கரித்து துர்க்கையாக வணங்கினால் துக்கம் விலகும்.<br />
<br />
<br />ஒன்பதாம் நாள் பத்து வயதுச் சிறுமியை அலங்கரித்து சுபத்ராவாக வழிபட்டால் மங்களம் கிடைக்கும்.</div>
testhttp://www.blogger.com/profile/14757701806482180362noreply@blogger.com0